#தென்காசி: பஜாரில் அறிவாலுடன் ரகளை செய்த வார்டு உறுப்பினர் கைது!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் பஜாரில் சொத்து விவகாரத்தில் உறவினர்களை தகாத வார்த்தையில் பேசியது மட்டுமில்லாமல், அரிவாளுடன் ரகளை செய்த வார்டு உறுப்பினர். உறவினர்கள் வழக்கு கொடுக்காத நிலையில், சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து காவல் துறை கைது நடவடிக்கை.

 தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் வேல்சாமி 43. விவசாயியான இவர் குலசேகரமங்கலம் பஞ்சாயத்து ஒன்றாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருடைய தங்கை குடும்பத்தினரும் அப்பகுதியைச் சேர்ந்த அவருடைய உறவினர்களுக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

 நேற்று முன்தினம் சேர்ந்த மரம் வேண்டும் பஜாருக்கு வேல்சாமி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு பஸ்சுக்காக வேல்சாமியின் தங்கை உறவினர்கள் காத்திருந்தனர். உடனே வேல்சாமி தனது தங்கைக்கு ஆதரவாக அங்கிருந்தவர்களை அவதூறாக பேசிய அறிவாலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்  வேல்சாமி.

தங்களது உறவினர் என்பதால் அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதற்குரிய வேல்சாமியாகருடன் பாஜாரின் அரிவாளுடன் ரகளை செய்த காட்சிகள்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதை அடுத்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பொது இடங்களில் அவதூறாக பேசி அரிவாளை  காட்டி கொலை மிரட்டல் விட்டதாக வேல்சாமியை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Ward member arrested for knowingly rowing in bazaar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->