என்னை கருப்பு என்று சொன்னால் நான் நெருப்பாய் மாறி உயர்வேன் - தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, அவர் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் இந்த விழாவில் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்ததாவது:- "இங்கு பலர் என்னை கருப்பு என்றும், பரட்டை என்றும் கிண்டல் செய்கிறார்கள். 

என்னை கருப்பு என்று சொன்னால் நான் நெருப்பாய் மாறி உயர்ந்து கொண்டே இருப்பேன். என்னை பரட்டை என்று சொல்வதனால், நான் பறந்து பறந்து உயர்ந்து கொண்டே இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thamizhisai saoundharrajan speach in school annual day function chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->