பல்லடம் படுகொலையில் 3வது குற்றவாளி கைது! தனி படை போலீஸ் அதிரடி! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தையே கதிகலங்க வைத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3வது குற்றவாளியான சோனை முத்தையா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். 

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுத்து கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை நால்வரின் உடல்களையும் பெற்றுக் கொள்ள மாட்டோம் என போராடிய நிலையில் காவல்துறையின் சமாதானத்தை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் படுகொலை சம்பவம் நடைபெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த விவகாரத்தின் மூன்றாவது குற்றவாளி சோலை முத்தையா என்பவரை தனிப்படை போலீசார் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரண்டாவது குற்றவாளியான செல்லமுத்துவை தனிப்படை போலீசார் பல்லடம் அருகே கைது செய்த நிலையில் இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான வெங்கடேஷை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெங்கடேசன் குடும்பம் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டுள்ளதால் தனிப்படை போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையை திருநெல்வேலி மாவட்டம் வரை விரிவுபடுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Third accused arrested in Palladam massacre incident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->