''நீட் தேர்வு'' நாடு முழுவதும் வலுக்கிறது... - திருமாவளவன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்துள்ளனர். நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. 

எங்களது எதிர்ப்பு தேசிய அளவில் உள்ளது. பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போல தற்போது முடிவு எடுக்க முடியாது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கி இருப்பது என்ன ராஜதந்திரம் என தெரியவில்லை. அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவு. தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தின் குரல் கொடுப்போம். 

நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களின் குரலாக முன்னெடுப்போம். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்துவோம். மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பாஜகவின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் வரையில் நீடிக்குமா என்பது சந்தேகம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan says NEET gaining strength country


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->