நுங்கம்பாக்கம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நுங்கம்பாக்கம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 3 பேர் கைது.!

சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இளம்பெண் மற்றும் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் நின்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 1½ கிலோ கஞ்சா மற்றும் 75 வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்த ராஜூ, சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரை சேர்ந்த அஜய்குமார், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாந்தி பிரியா என்பது தெரிய வந்தது. 

இவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் ராஜூ மீது ஏற்கனவே ஏழு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested for drugs sale in nungapakkam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->