கள்ளக்குறிச்சி கலவரம் : மேலும் மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் உள்ள பொருட்கள், பள்ளி பேருந்துகள் மற்றும் போலீசார் வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு  தீ வைக்கப்பட்டது. 

இதனால், சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த கலவரத்தை தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளிசொத்துகளை சேதப்படுத்தியவர்கள் உள்ளிட்டோரை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 436 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக கள்ளக்குறிச்சி அருகே லட்சியம் கிராமத்தை சேர்ந்த மணி கண்டன் மற்றும் இரு சக்கர வாகனங்களை சேதபடுத்தியதாக மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மதுபாலனை கைது செய்தனர்.

மேலும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய ராயர்பாளையத்தை சேர்ந்த சீராளன் உள்பட மொத்தம் மூன்று பேரை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested for kallakurich school problam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->