ராமநாதபுரம் || லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் நோயாளியை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸ் வாலாந்தரவை அருகே சென்றபோது பெட்ரோல் பங்கிலிருந்து வெளியில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது லாரி மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died for accident in ramanathapuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->