நெல்லையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் பிரதான கட்சிகளும் அ.தி.மு.க., தி.மு.க., பாஜக போன்ற கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னால் தலைவராகுல் காந்தி வருகிறார். 

மேலும் அவர் அன்றைய நாள் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரச்சாரத்தின் போது திருநெல்வேலி உள்பட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தி பேசவுள்ளார். 

இதனால் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை இரண்டு நாட்கள் மாநகரம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirunelveli 2 days drones flying ban


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->