திருப்பதி லட்டு விவகாரம்: மாட்டுக் கொழுப்பை கலந்த தமிழக நிறுவனம் - போலீசில் புகார்!
Tirupati laddu issue complaint
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்துள்ளது.
திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார்.
விலங்குகளின் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் நெய் சப்ளை செய்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் ஏ ஆர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tirupati laddu issue complaint