தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் அதிரடி கட்டண உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டம் மனையடி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் இனம்காரியங்கள், விழுப்புரம் மாவட்டம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 5 முதல் 20 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN 5 toll booths fares increase 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->