தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? - அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு.! - Seithipunal
Seithipunal


வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதளாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கு மறுநாள், நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பணி நாளாக உள்ளது. பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை பொது விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt discuss holiday in november 1st


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->