விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார். இதனால், காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி கடந்த 21-ந்தேதி வரை நடைபெற்றது. அதன் படி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.

அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today nomination consider in vikravandi constituency


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->