திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்!! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்வதற்கான விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்தில் பல்வேறு பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக தினமும் தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மூன்று பயணிகள் தங்களது மடிக்கணினியில் தங்கத்தகடுகள், தங்க கட்டி, தங்க செயின் ஆகியவற்றை மறைத்து எடுத்து வந்திருப்பது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

 அவர்களிடம் இருந்த ரூ. 26 லட்சம் 390கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தங்கம் கடத்தி வந்த குற்றத்திற்காக மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Airport Rs26 lakh gold confiscated


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->