ஜூஸ் மிக்சருக்குள் தங்கம்... அதிகாரிகளை அதிரவைத்த பயணி! விமான நிலையத்தில் பரபரப்பு.!
Trichy airport smuggling gold seized
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கொண்டுவரப்படுவது தொடர்கதையாக உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.83 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் மொத்த எடை 2.579 கிலோ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கம் கடத்தி வரப்பட்ட பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Trichy airport smuggling gold seized