கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்..கோவையில் முப்பெரும் விழா - முதல்வர் அழைப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை : கோவையில் வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு  40 வென்றது போல் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்.
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியினை உறுதி செய்திட கோவை முப்பெரும் விழா ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்.

கோவை மும்பெறும் விழாவை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என நினைத்துக் கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து சில கட்சிகள் அரசியல் லாபம் தேடின அந்த கட்சிகளின் உண்மையான நிலையை திமுக கூட்டணிக்கு அளித்த வெற்றி வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். அதனால் தான் கோவையில் மும்பெறும் விழா நடைபெறுகிறது என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது திமுகவிற்கு மட்டுமான விழாவோ அல்லது கூட்டணி தோழமை கட்சிகளுக்கான விழா மட்டுமல்ல. தமிழ்நாடு மக்களின் விழா. அவர்கள் நமக்கு வழங்கி உள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா. மதவாத அரசியலுக்கு கடிவாளம் போட்டு ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாத்து நாட்டை வழி நடத்தும் வகையில் 40க்கு 40 வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripartite Festival in Coimbatore Stalin invite volunteers


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->