பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பலி!
Two boys were electrocuted while bathing in the pumpset
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இரண்டு சிறுவர்கள் பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மின்சார கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மூன்றாம் வகுப்பு சிறுவனும் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது.
மின்சார கம்பி தண்ணீரில் விழுந்ததால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிர் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two boys were electrocuted while bathing in the pumpset