காதலியின் திருமணத்தை தடுக்க தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட காதலன் - புகாரில் சிக்கிய சம்பவம்..! - Seithipunal
Seithipunal


காதலியின் திருமணத்தை தடுக்க தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட காதலன் - புகாரில் சிக்கிய சம்பவம்..!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுருளிராஜ். இவருடைய மகள் சுபாஷினியும், அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த, சுபாஷினியின் பெற்றோர் அவரை வேறொரு இடத்திற்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர்.

இதனால், கோபமடைந்த கார்த்திக் வீட்டில் மரணம் நிகழ்ந்தால், திருமணம் நின்று விடும் என்று எண்ணி காதலியின் தந்தை சுருளிராஜை கொலை செய்ய முடிவு செய்தார். அதன் படி கார்த்திக் கடந்த 2013ம் ஆண்டு தனது நண்பரான சுகுமார் உள்ளிட்டவருடன் சேர்ந்து சுருளிராஜை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். 

ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதன் பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக சுருளிராஜ் அளித்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை அனைத்தும் முடிவுற்றதையடுத்து, இருவரும் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for tried kill attack in theni


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->