ஒரே வருடத்தில் இரண்டு முறை நிரம்பிய தொப்பையாறு அணை - நாளை திறப்பு.!
two times fill thoppaiyaru dam in one year
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே செக்காரப்பட்டி பகுதியில் உள்ளது தொப்பையாறு அணை. இந்த அணைக்கு சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தொப்பையாறு அணை நிரம்பி உள்ளது. இந்த அணை திறக்கப்பட்டால் அதன் மூலம் செல்லும் நீரினால் தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தற்போது மழை காரணமாக வரும் நீர் வரத்தினால் தொப்பையாறு அணை தனது முழு கொள்ளளவான 50 அடியை முழுவதுமாக நிரம்பி உள்ளதனால், கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அணையின் அழகை காண்பதற்கு அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
இந்த அணையின் நலன்கருதி நாளை அல்லது நாளை மறுநாள் அணை திறக்கப்படுவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே ஆண்டில் இரண்டு முறை தொப்பையாறு அணை நிரம்பியுள்ளதால் இரண்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையின் முழு கொள்ளவும் நிரம்பியுள்ளதால், தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary
two times fill thoppaiyaru dam in one year