நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்.!  - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். பிறகு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என்று பலர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விஜயகாந்த் ஒரு பழம்பெரும் நடிகரும், வல்லமைமிக்க தலைவருமாவார். தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர்.
சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார்.

அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்" என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister rajnath singh condoles to actor vijayakanth death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->