மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராமநாதபுரம் வருகை! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறும். 

அந்த வகையில் நாளை மறுநாள் ராமநாதபுரம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் காலை 6 மணி அளவில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் ராமநாதபுரம் செல்ல உள்ளார். இதற்காக நாளை மாலை ராமநாதபுரத்திற்கு தனி ஹெலிகாப்டரில் வரும் ராஜநாத் சிங் மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

பின்னர் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் காலை 6 மணிக்கு நடைபெறும் கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை போலீசாரின் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister Rajnath Singh visit Ramanathapuram


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->