பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்த மர்ம நபர்.. போலீஸ் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தையால் பேட்டை பகுதியை சேர்ந்த 31 வயது பெண் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த செய்தியை அனுப்பிய நபர் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அதன்படி உங்களுடைய புகைப்படம் ஒன்று என்னிடம் உள்ளது. அதை நான் தவறாக சித்தரித்து உங்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என கூறி ஆபாச புகைப்படத்தை அவருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பயந்த அந்தப் பெண் அவர் கேட்ட 8000 ரூபாயை அனுப்பி உள்ளார். மேலும் இதுகுறித்து தனது குடும்பத்திற்கு தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்று பயந்து யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். மீண்டும் அந்த மர்ம நபர் இன்ஸ்டாகிராம் மூலமாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண் தனது கணவருடன் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unknown person blackmail money by marphing woman's photo in Puducherry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->