லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த விஏஓ - கோயம்புத்தூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொம்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக, விஏஓ அலுவலத்திற்கு சென்றுள்ளார். அங்கு விஏஓ ஆக பணியாற்றிய வெற்றிவேல் என்பவர் கிருஷ்ணசாமியிடம் வாரிசு சான்றிதழ் தரவேண்டும் என்றால் ரூ.3,500 லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு கிருஷ்ணசாமி வாரிசு சான்றிதழுக்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் ரூ.3,500 தர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஏஓ சான்றிதழை வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து கிருஷ்ணசாமி இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுக்களை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து அதனை விஏஓ வெற்றிவேலிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, கிருஷ்ணசாமி விஏஓவிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வெற்றிவேலை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த வெற்றிவேல் பணத்துடன் அருகில் இருந்த குளத்தில் குதித்துள்ளார். 

உடனே போலீசாரும் குளத்தில் குதித்து வெற்றிவேலை பிடித்துள்ளனர். மேலும், குளத்தில் விழுந்த பணத்தையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vao arrested for bribe in coimbatore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->