#தமிழகம் | காதலிக்க வற்புறுத்தி, பள்ளி சிறுமியின் கழுத்தை அறுத்த நாடக காதலன் குமார் கைது.! - Seithipunal
Seithipunal


ஆற்காடு அருகே காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்த ராஜவேல் குமார் என்ற இளைஞரை, போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்துள்ள கலவை சென்னசமுத்திரம் மோட்டூரை சேர்ந்தவர் ராஜவேல் குமார்.

25 வயதாகும் இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த கடந்த மாதம் 27ஆம் தேதி, சிறுமியை வழிமறித்து ராஜவேல் குமார் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

அந்த சிறுமி காதலை ஏற்க மறுத்து, தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது ராஜவேல் குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கலவை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ராஜவேல் குமாரை தேடிவந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பதுங்கி இருந்த ராஜவேல் குமாரை இன்று போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore kalavai Drama Lover Arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->