அய்யய்யோ... விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்! இருவரின் நிலை என்ன? கொலை வழக்கு பதிவு! அதிரவைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் சித்தேரிபேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரத்தில் நடந்த வளைகாப்பிற்காக சென்ற இளைஞர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

கள்ளத்தரையம் குறித்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பிரவீன், ஜெகதீஷ் ஆகியோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே விழுப்புரத்தில் கலாச்சாராயம் குடித்துவிட்டு, சென்னைக்கு பணிக்கு சென்ற கூலி தொழிலாளி ஒருவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விஷ சாராயம் குடித்து கச்சராபாளையம் பகுதியில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், கள்ளச்சாராய வியாபாரி சின்னத்துரையிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள்அனைத்தும் தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மெத்தனால் கடத்திவந்த மாதேஷின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை விவரம், புகைப்படங்களை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் மெத்தனாலில் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து சாராய விற்பனை செய்துள்ளதும்,  பாதிக்கு பாதி அளவு தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vilupuram kallasarayam case kallakurichi kallasarayam case info


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->