விராலிமலை: செங்கல் சூளையில் நடந்த கொடூரம்! தலை நசுங்கிய கணவன்! தப்பி ஓடிய மனைவி! - Seithipunal
Seithipunal


விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் தலையில் அவரது மனைவி கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார். இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பெயர் இலஞ்சியம். இவர்கள் விராலிமலையை அடுத்த கல்குத்தான் பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவரின் தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். 

சரளபள்ளத்தில் இருந்து கல்குத்தான் பட்டிக்கு அன்றாடம் சென்றுவர சிரமமாக உள்ளதால், சுப்பிரமணி, அவரது மனைவி மற்றும் மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் ஆகிய நான்கு பேரும் அந்த செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். 

சுப்பிரமணிக்கும் அவரது மனைவி இளஞ்சியத்திற்கும் கடந்த சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே‌ கருத்து வேறுபாடு முற்றி நேற்று இரவு, இளஞ்சியம் சுப்பிரமணியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதற்கிடையே செங்கல் சூளையின் உரிமையாளர் ஆறுமுகம் வழக்கம் போல் இன்று காலை செங்கல் சூளைக்கு  வந்துள்ளார். அப்போது யாரும் பணியில் இல்லாததால், அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்று ஆறுமுகம் பார்த்துள்ளார்.

அங்கு சென்று பார்த்தபோது ஆறுமுகத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சுப்பிரமணி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அருகில் போய் பார்த்தபோது சுப்பிரமணி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ஆறுமுகம் இது குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள இளஞ்சியம், அவரது தங்கை மற்றும் அவரின் கணவர் ஆகிய மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viralimalai wife kill husband


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->