திருமங்கலம் || அறுவடை இயந்திரத்தில் சிக்கிய தலை முடி - பரிதாபமாக பறிபோன பெண்ணின் உயிர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஒச்சுக்காளை - வெண்ணிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

இந்த நிலையில் வெண்ணிலாவின் அப்பா சின்னசாமி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குதிரைவாலி பயிரிட்டுள்ளார். அதனை அறுவடை செய்வதற்காக கதிரடிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அறுவடை நடைபெற்றது. 

அந்த நேரத்தில் வெண்ணிலா பணியில் ஈடுபட்ட போது திடீரென அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கிகொண்டது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வெண்ணிலாவின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெண்ணிலா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman died in madurai thirumangalam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->