மீண்டும் பிரதமாகும் மோடி - பழனி கோவில் முடி காணிக்கை செலுத்திய பெண்.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகிறார். இதனை பாஜக கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி நேற்று பழனிக்கு வந்தார். 

அங்கு அவர் 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருப்பதையொட்டி, பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த உள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் மோடியின் உருவப்படம் கொண்ட முகமூடியை அணிந்தபடி, சரவணப்பொய்கை முடிக்காணிக்கை நிலையத்தில் பூமுடி செலுத்தினார். 

அவரை அங்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். இவர், கடந்த மாதம் 28-ந்தேதி பழனி கோவிலுக்கு வந்து 3-வது முறையாக மோடி பிரதமராக வேண்டும், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman offered hair in palani temple for modi selected prime minister


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->