திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. இவர் கடந்த 11-ந் தேதி தனது உறவினர்களுடன் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். ஆனால், கிரிவல பக்தர்கள் கூட்டத்தில் உஷாராணி அவரது உறவினர்களிடம் இருந்து தவறி சென்றார்.

வழக்கமாக உஷாராணி கிரிவலம் வந்து செல்வதால் எந்தவித பதற்றமும் இன்றி அவரது உறவினர்கள் வீடு திரும்பினர். ஆனால், அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள சிட்கோ பேருந்து டிப்போ அருகில் மயங்கி விழுந்து கிடந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உஷாராணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு உஷாராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து உஷாராணியின் சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிவலம் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died in thiruvannamalai girivalam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->