இன்று (அக்-31) பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.

அந்த வகையில் இன்று (அக்டோபர் 31) ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதியாக சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். மேலும், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். 

இந்த முகாமில் கலந்து கொள்ள வரும்போது தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0424-275860 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Employment camp today in erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->