குடும்பப் பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Worker suicide in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் திப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா(52). இவருடைய மனைவி பார்வதி.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜா தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த குடும்பத்தினர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ராஜாவின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இண்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Worker suicide in dharmapuri