#விழுப்புரம் மாவட்டம் || காதணி விழாவிற்கு மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் காதணி விழாவிற்காக மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் மெயின் ரோட்டில் கிளியனூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் காரின் சீட்டுக்கு அடியில் 30 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்ததில், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுதாகர்(வயது 22) என்பது தெரியவந்தது.

மேலும் காதணி விழாவிற்காக மதுபாட்டில்கள் கடத்தி சென்றதாக சுதாகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் சுதாகரை கைது செய்து, மது பாட்டில்களுடன் காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for smuggling liquor bottles in Villupuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->