கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது செல்போனை ஆய்வு செய்து கொண்டு தற்கொலைக்கு முன்பு அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் ராஜகோபுரத்தில் உள்ள திருப்பதி பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிதாகவும் சரியாக வட்டியை செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் வேலை இல்லாததால் சரி வழங்க முடியாமல் போனது.

இதனால்,  இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தொலைபேசியில் அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து கந்தனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  திருப்பதி பைனான்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Committed Suicide For Over due


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->