நாமக்கல் || மாடியில் மயங்கி கிடந்த வாலிபர் - போதை ஊசியால் பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கௌதம்ராஜ். வண்டி குதிரைகளுக்கு முடிவெட்டும் தொழில் செய்து வந்துள்ள இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காலப்போக்கில் கௌதம்ராஜுக்கு கஞ்சா, போதை ஊசி போட்டு கொள்வது உள்ளிட்ட பழக்கங்கள் இருந்து வந்துள்ளது. இதையறிந்த, அனுசுயா கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் கௌதம்ராஜ் அந்த பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கௌதம்ராஜ் வீட்டிற்கு அவரது நண்பர்கள் இரண்டு பேர் வந்துள்ளனர். வீட்டின் முன்பு பேசி கொண்டிருந்த மூவரும் அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் நண்பர்கள் பதறியடித்து கொண்டு கீழே வந்துள்ளனர். உடனே அனுசுயா மேலே வந்து பார்த்தபோது அங்கு, கௌதம்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே, அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுதொடர்பாக மருத்துவர்கள் கௌதம்ராஜின் நண்பர்கள் மற்றும் அனுசுயாவிடம் விசாரித்தபோது, மொட்டை மாடியில் போதை தரும் மருந்தை ஊசி மூலம் கையில் போட்டு கொண்டபோது அவர் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, மொட்டை மாடியில் இருந்த டம்ளர், ஊசி, சிரிஞ்ச் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் கௌதம்ராஜ்க்கு போதை ஊசி மருந்து எங்கிருந்து யார் மூலம் கிடைத்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died for drug injuction in namakkal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->