கன்னியாகுமரி || இளைஞர் அடித்து கொலை,காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அச்சன்குளம் ஓடைத்தெருவைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் இளைய மகன் சுரேஷ்ராஜாவும் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு அடுத்த மாதம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார். இந்நிலையில்,  சுரேஷ் ராஜாவுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சாம்சன்மனோ என்பவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில், மதுபோதையில் விழுந்த கிடந்த சுரேஷ்ராஜாவை  சாம்சன்மனோ கடப்பாறை கம்பியால் தலையில் சரமரியாக அடித்துள்ளார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலரீந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சாம்சன்மனோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Killed in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->