பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. இளைஞர் கொலை.. மதுரை அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் இளங்காடு அடுத்துள்ள பகுதியில் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இறந்து கிடந்தது சிக்கந்தர் சாவடி மந்தி கோவில் பகுதியை சேர்ந்த பசுபதிகண்ணன் என்பது தெரியவந்தது. இவரை நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பசுபதி கண்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்வதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

 இதன் காரணமாக பசுபதி கண்ணனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி இன்று மது அருந்த அவரை அழைத்துள்ளார் நம்பிய பசுபதி அங்கு சென்றபோது பாரதி மற்றும் அவருடன் வந்த சிலர் வசதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

 இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எடுத்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth murdered Near Madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->