தேனி || பைக்கில் பதுங்கி இருந்த பாம்பு - வாலிபரின் உயிரை பறித்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் நணபர் ராம்குமாருடன் நேற்று இரவு சுருளிப்பட்டி மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் முன்புறம் திடீரென பாம்பு ஒன்று வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே ஹரிகிருஷ்ணன் பிரேக் பிடித்துள்ளார். அவரது மணிக்கட்டை குறிவைத்து பாம்பு கொத்தியது. உடனே அவரை ராம் குமார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. வண்டியில் இருந்த பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for snake bite in theni


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->