குடி போதையில் போலீசாரைத் தாக்கிய வாலிபர்கள் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்கள் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன். இவர்கள் இருவரும் அன்னூர்-சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்தப் பகுதியில், மூன்று இளைஞர்கள் சாலை ஓரத்தில் நின்று மது குடித்து கொண்டு இருந்துள்ளனர். இதைபார்த்த போலீஸார், அங்கு நின்று மது குடிக்கக் கூடாது என்றும் அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் போலீஸாருக்கும் அந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதையடுத்து மூன்று இளைஞர்களும் சேர்ந்து காவலர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சகா காவலர்கள் அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் படி அங்கு விரைந்து சென்ற சக போலீஸார் காவலர்களை தாக்கிய மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், மூன்று இளைஞர்களும் பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும், மது போதையில் போலீஸாரிடமே தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths attack police officers in coimbatore


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->