மக்களே உஷார் - தமிழகத்தில் 5 நாட்கள் வெளுத்து வாங்க போகும் மழை.! - Seithipunal
Seithipunal


வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 8:30 மணிக்கு, ஒடிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவியது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 10 செ.மீ., மழையும், மேல்பவானியில் 8, நடுவட்டம், மேல்கூடலுார், கோவை மக்கினம்பட்டி பகுதிகளில் தலா 6 செ.மீ., மழையும் பதிவானது." என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five days rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->