புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை மட்டும்தான்! குடையில்லாமல் வெளிய போவாதீங்க! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை ரிலீசானது முதல் மிதமானது வரை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்த வரை இரவு நேரங்களில் அவ்வபோது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிருடங்களில் கனமழை முதல் லேசான மழை வரையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு இடங்களில் இன்றும் மிக கனமழை பெய்யகூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டி உள்ள வங்ககடலில் உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new low pressure area is likely to form over the Bay of Bengal in the next 24 hours


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->