#Breaking :: தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிக கனமழையும், வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

நேற்றைய தினம் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்துக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 430 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டாலும் தமிழக முழுவதும் பரவலாக மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

red alert withdraw in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->