தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை  நிலவக்கூடும். மேலும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்  என தெரிவித்துள்ளது.

வானிலை:

இதைத்தொடர்ந்து 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2°- 3°  செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் 24ம் தேதி மற்றும் 25ஆம் தேதி தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை:
 இது தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 22 °-23° ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸ் ஒட்டியில் இருக்கக்கூடும். இதைத்தொடர்ந்து நாளை, காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.மேலும் நாளை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 22°-23° செல்சியஸை ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the report of Chennai Meteorological Centre


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->