பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாணத்தில் கோர விபத்து - 13 பேர் பலி, 20 பேர் காயம்.!
13 killed 20 injured in accident in Pakistan Punjabi province
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ருக்னபூர் அருகே முல்தான்-சுக்கூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேனின் டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பட்டை இழந்து சாலையின் நடுவே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து பின்னால் வந்த பேருந்து மற்றும் ஜீப்பும் அடுத்தடுத்து வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு லாகூரில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஹீம் யார் கானில் உள்ள ஷேக் சயீத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 5 பேரில் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
13 killed 20 injured in accident in Pakistan Punjabi province