வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு- அமெரிக்காவில் 2 பேர் பலி!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வாலிபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கடைக்குள் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்கா மட்டுமல்லாமல் அவ்வப்போது உலக நாடுகளில் பல்வேறு நகரங்களில் துப்பாக்கி கலாச்சாரத்தால் பல உயிர்கள் பலியாகிவருகின்றன. இந்தநிலையில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எல்கார்ட் நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் செயல்படுகிறது. இந்த வணிக வளாகம் உள்ளே உள்ள  ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வாலிபர் ஒருவர் சென்றிருந்தனர்.

அப்போது திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் கடைக்குள் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக அதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த வாலிபர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 2 dead in shopping mall shooting in US 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->