ஆப்கானிஸ்தான்: ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
3 killed in attack on hotel in Afghanistan
ஆப்கானிஸ்தானில் ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷாஹர்-இ-நாவ் பகுதியில் சீன தூதர்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் வருகை தரும் ஹோட்டல் குறி வைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் கட்டிடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டதால் ஹோட்டல் கட்டிடம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
இந்நிலையில் தாலிபான் பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டின் போது ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
இதையடுத்து இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் சீன விருந்தினர் மாளிகைக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காபூலில் சீன தூதரக நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
3 killed in attack on hotel in Afghanistan