மாலியில் தங்க சுரங்கத்தில் விபத்து; 48 பெண்கள் பலி, பலர் படுகாயம்; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என் அச்சம்..! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 48 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மாலியில் கெனீயா மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்க சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில், நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன், மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி, கங்காபா மாவட்டம் கூலிகோரோ பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

48 women died in a gold mine accident in Mali


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->