பெண்ணுக்கு நடந்த சோகம்!!! திடீரென வெடித்த எலக்ட்ரிக் பைக் பேட்டரி!!!
Tragedy for a woman Electric bike battery suddenly exploded
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைகுடியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவர் சொந்தமாக கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த 45 வயது ஜான்சி பாப்பா என்பவர் கோழி பண்ணையில் தங்கி இருந்து வேலைப் பார்த்து வந்துள்ளார்.தேவதாசுக்குச் சொந்தமான இரண்டு மின்சார இரு சக்கர வாகனங்கள் தோட்டத்தின் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்தத் தோட்டத்தில் இரண்டு வாகனங்களின் பேட்டரிகளும் சார்ஜ் ஏற்றுவதற்காகக் கோழி முட்டைகள் அடைகாக்கப் பயன்படுத்தும் இன்குபேட்டர் வைக்கப்பட்டுள்ள அறையில் நிறுத்தப்பட்டிருந்தன .

பேட்டரி வெடிப்பு:
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி காலையில் ஜான்சி பாப்பா அங்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு பேட்டரி வெடித்துள்ளது. இதில் அவர் படுகாயமடைந்தார். இந்தச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவிக்கு ஜான்சி பாப்பாவைக் கொண்டு சேர்த்தனர். அதன் பிறகு சில நாட்களாகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். 15 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த ஜான்சி பாப்பா சிகிச்சைப் பலனின்றி நேற்றுக் காலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் மேற்கொண்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy for a woman Electric bike battery suddenly exploded