இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது.

தொடர்ந்து  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதன் காரணமாக, இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில்,  மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றுள்ளார்.


இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று சற்று நேரத்திற்கு முன்னதாக பதவியேற்றுக் கொண்டார். கொழும்புவில் உள்ள அதிபா் செயலகத்தில் அனுரா குமார திசநாயகேக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தொடர்ந்து புத்த மத பிக்குகள் புதிய அதிபராக பதவியேற்ற அனுர குமார திசநாயகேவின் கையில் கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anura Kumara Dissanayake sworn in as Sri Lanka new president


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->