கேரளா படகு விபத்து - உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


கேரளா படகு விபத்து - உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு.!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் தனூர் - பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு ஒன்று சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது இந்தப் படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், குழந்தைகள் உள்பட இதுவரைக்கும் 22 சுற்றுலா பயணிகளின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும், கடலில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என்று கருதி, தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுவாக கேரளாவில் சுற்றுலா படகு பயணம் மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான படகு இரவு 7 மணி வரை கடலில் பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.

இதன் காரணமாக போலீசார் படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், படகு பயணம் விதிமுறைகளை மீறியுள்ளதையும் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து நாசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file on boat owner for kerala boat accident issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->