சீனா || மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்க படுவாரா?.பொது கூட்டத்தில் நடக்க போவது என்ன? - Seithipunal
Seithipunal


சீனா நாட்டின் அதிபராக கடந்த 2012 முதல் ஜி ஜின்பிங் செயல்பட்டு வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும். 

அந்த கூட்டத்தில் சீன நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலும் மீண்டும் சீன அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். 

இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

இதையடுத்து, இந்தக் கூட்டத்தை துவங்கி வைத்து பின்னர் பேசிய சீனர் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததாவது, "ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. குழப்பத்தில் இருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றியுள்ளது.

தைவான் பிரிவினைவாதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாகவும், பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china national congrass public meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->