சீனாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி.!
china shanghai corona
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஷாங்காய் நகரில் பெருமளவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
நாள் தோறும் 20,000 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 2417 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெறிவித்துள்ளது.